இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி தொல்லை காய்கறி வியாபாரி கைது

இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-26 23:02 GMT

மும்பை, 

இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் அறிமுகம்

மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்த 24 வயது பெண் கிளினிக் ஒன்றில் கம்பவுண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தானே, காசர்வடவிலியை சேர்ந்த காய்கறி வியாபாரி சுரேஷ்(வயது25) என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். 2 பேரும் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு வாட்ஸ்-அப்பிலும் உரையாடி வந்தனர். இந்தநிலையில் சுரேஷ், இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்துவிட்டார். எனினும் அவர் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு போன் செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்தார்.

ஆபாச படங்கள்

இந்தநிலையில் ஒருநாள் சுரேஷ், இளம்பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து சாக்கிநாக்கா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காய்கறி வியாபாரி சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்