மருத்துவ காப்பீட்டு திட்ட குறைகளை நீக்கக்கோரி அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-05-30 21:45 GMT

திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

அப்போது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மின்வாரிய பிரிவு மாவட்ட செயலாளர் நல்லகண்ணு உள்பட அரசு ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்