பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-08 22:47 GMT
வாலாஜாபாத் 

சுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் ஓடைத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 29), சென்னை பழஞ்சூர் காமராஜர் தெருவை சேர்ந்த ரூபன்(30) ஆகிய இருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பா.பொன்னையா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மேலும் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்