தனுஷ்கோடி அருகே ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பல்

தனுஷ்கோடி அருகே ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பலாகின.

Update: 2018-07-08 22:15 GMT

ராமேசுவரம்,

தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் உமையனன் மகன் தரைக்குடியான் என்பவர் குடிசை அமைத்துள்ளார். இதில் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி அதிஷ்டம் ஆகியோர் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சாப்பாடு சமைத்து விட்டு அதிஷ்டம் வெளியே வந்துள்ளார்.

அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. இதில் ஓட்டல் இருந்த குடிசை மற்றும் அதன் அருகில் சுப்பிரமணியன் மனைவி பாக்கியம், சரவணன் மனைவி சாரதா தேவி ஆகியோரின் பெட்டிக்கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

குடிசை தீப்பற்றி எரிவதை கண்ட அதிஷ்டம் உள்பட 2 பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்