கீழப்பழுவூர், திருமானூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

அரியலூர் மாவட்டம், கீழப் பழுவூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-08 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், கீழப் பழுவூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் (மேற்கு) அசோகசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன் முன்னிலை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாசந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிதை பித்தன் பங்கேற்று பேசினார். இதில் துணை அமைப்பாளர் முத்தையா பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருமானூரில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இலக்கியதாசன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கவிதை பித்தன் சிறப்புரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்