பள்ளிகளில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி களில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-13 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 16.7.2018 அன்று வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி வருகிற 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரேபதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளில் இணையதளம் https://tnvelaivaaippu.gov.in வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைனிலோ அல்லது தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியோ பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்