திருச்செந்தூர் அருகே பரிதாபம் விஷ வண்டு கடித்து தொழிலாளி சாவு

திருச்செந்தூர் அருகே விஷ வண்டு கடித்து தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2018-07-19 21:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே விஷ வண்டு கடித்து தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தொழிலாளி

திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் வன்னியங்காட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் அங்குள்ள தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 14-ந்தேதி தோட்டத்தில் வேலை செய்தபோது, பலத்த காற்று வீசியது. அப்போது அங்குள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூடு தவறி கீழே விழுந்தது. உடனே அதில் இருந்து வெளிவந்த விஷ வண்டுகள், அங்கு நின்று கொண்டிருந்த முருகேசனை கடித்தன.

பரிதாப சாவு

அவர் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை துரத்தி சென்று வண்டுகள் கடித்தன. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ வண்டு கடித்து இறந்த முருகேசனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்