காஞ்சீபுரத்தில் காதுகேளாதோர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில், காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-23 22:15 GMT
காஞ்சீபுரம்,

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரியும் காஞ்சீபுரம் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில், காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட ஏராளமான காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்