கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பி கைது

கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-28 22:15 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று எளாவூரில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எளாவூர் பஜாரையொட்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சரத்குமாரை கத்தி முனையில் வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், 2 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர்கள், எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (26), அவரது தம்பி டால் ஆனந்தன் (24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்