இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

Update: 2018-07-29 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300–க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர்.

அவர்கள் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தார்களாம். இதையடுத்து அச்சம் அடைந்த மீனவர்கள் வலைகளை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றபோது சில படகுகளை சுற்றிவளைத்து வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீன் பிடிப்பதை பாதியிலேயே மீனவர்கள் கைவிட்டு கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களை அச்சம் அடைய செய்துள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்