தா.பழூர் ஒன்றிய அளவிலான குறுவட்ட கால்பந்து போட்டிகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Update: 2018-07-31 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டியை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போட்டியில் தா.பழூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத் குமார், வந்தியத்தேவன், லூசியா மேரி, ரவிச்சந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியை ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டு பார்த்தனர். 

மேலும் செய்திகள்