இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன?

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-01 22:00 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியபட்டு காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சுகுணா. இவர்களுடைய மகள் துர்கா தேவி (வயது 17). பிளஸ்–2 படித்து முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று துர்கா தேவி, வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சுகுணா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்கா தேவி உடல் நலக்கோளாறு காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்