லாரி திருட்டு; போலீசார் விசாரணை
நேற்று காலை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே லாரியை நிறுத்தி விட்டு உடையார்பாளையம் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் (வயது 22). இவர் தனது லாரியை வாடகைக்கு விட்டு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே மணிகண்டன் லாரியை நிறுத்தி விட்டு உடையார்பாளையம் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் லாரி கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தந்தை கருணாநிதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் (வயது 22). இவர் தனது லாரியை வாடகைக்கு விட்டு ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே மணிகண்டன் லாரியை நிறுத்தி விட்டு உடையார்பாளையம் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வனத்துறை அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் லாரி கிடைக்கவில்லை. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தந்தை கருணாநிதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.