பெண் விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன?

புதுச்சத்திரம் அருகே பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-10 22:06 GMT
புவனகிரி,



புதுச்சத்திரம் அருகே உள்ள வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி மலர்விழி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது, விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மலர்விழியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மலர்விழி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழி உடல்நலக் கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்