மும்பை பல்கலைக்கழக வளாக கழிவறையில் மாணவி மானபங்கம்

மும்பை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக பதிவாளர் தினேஷ் காம்ளேவிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

Update: 2018-08-10 22:53 GMT
மும்பை,

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவறையில் சம்பவத்தன்று மாணவி  இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த மர்மநபர் மாணவியை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து பதிவாளர் தினேஷ் காம்ளே கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட மாணவிக்கு முதலில் கவுன்சிலிங் வழங்கி உள்ளோம். இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக பெண்கள் நல பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அறிக்கை வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்