கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த பலசரக்கு கடை வியாபாரி மீது தாக்குதல் ஒருவர் கைது

கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த பலசரக்கு கடை வியாபாரி மீது தாக்குதல் ஒருவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு.

Update: 2018-08-12 22:15 GMT

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே ஸ்ரீலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). வியாபாரியான இவர் உசரவிளையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு உசரவிளை ஆலி, லட்சுமிபுரத்தை சேர்ந்த ரூபன், மகேஷ் ஆகிய 3 பேர் வந்து கடனுக்கு சிகரெட் கேட்டனர். ஆனால் விஜயன் கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விஜயனை தாக்கி கடையை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபனை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்