பா.ஜனதா நிர்வாகி மீது தாக்குதல் தி.மு.க. பிரமுகர் கைது

பா.ஜனதா நிர்வாகி தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து விமர்சனம் பதிவு செய்தார். இதுக்குறித்து தகவலறிந்த தி.மு.க. பிரமுகர் அவரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-15 21:30 GMT

கடலூர், ஆக.16–

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவர் பா.ஜனதா கட்சியில் ஒன்றிய நிர்வாகியாக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து விமர்சனம் செய்து கருத்து ஒன்றை பதிவு செய்து இருந்தார்.

இதையறிந்த பாதிரிக்குப்பத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மணிகண்டன்(வயது 31) என்பவர் ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்டு, அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த ஸ்டாலின் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்