சென்னை மொபட் மீது பஸ் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி

விருகம்பாக்கத்தில் மொபட் மீது பஸ் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலியானார்.

Update: 2018-08-20 23:00 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் காவ்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் மெகசினிபிரியங்கா (வயது 17). ராமாபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ராமாபுரத்தில் இருந்து நெற்குன்றத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

போரூர் ஆற்காடு சாலை, விருகம்பாக்கம் அருகே சென்றபோது குன்றத்தூரில் இருந்து வடபழனி நோக்கி வந்த அரசு பஸ், மொபட்டின் பின்னால் மோதியது. இதில் மெகசினிபிரியங்கா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். தகவல் அறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு பஸ் டிரைவர் குமார் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்