பழனி பஸ்நிலையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

பழனி பஸ்நிலையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-08-26 22:00 GMT
பழனி, 

பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 6-வது வார்டை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி சரிதா (வயது 33). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பழனி பஸ் நிலையத்துக்கு வந்த சரிதா விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த பயணிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்