சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது உடல் கருகிய பெண் சாவு

சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்த பெண் உடல் கருதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-02 22:15 GMT
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள அத்திப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி லட்சுமி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது காய்கறி எடுத்த போது அருகில் உள்ள மண்எண்ணெய் கேன் எதிர்பாராவிதமாக ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்தது.

இதில் ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்த லட்சுமி பலத்த தீக்காயம் அடைந்தார். உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 6 ஆண்டுகளில் பெண் இறந்ததால் இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்