வைகை அணை பகுதியில் நீரில் மூழ்கி தொழிலாளி சாவு

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் குளித்த போது தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-14 21:45 GMT
ஆண்டிப்பட்டி,

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் முத்துபாண்டி (வயது 18). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் பிரிக்கும் தடுப்பணையில் குளிக்க சென்றார்.

அங்கு தடுப்பணையில் இருந்து சென்ற நீரில் தனது நண்பர்களுடன் அவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றார். அதில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து நண்பர்கள் வைகை அணை போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து அவரை தேடினர். சுமார் 1 மணி நேரம் போராடி முத்துபாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்