கடனை செலுத்த முடியாததால் விரக்தி: தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு

இளையான்குடி அருகே கடனை செலுத்த முடியாததால் தொழிலாளி தீக்குளித்தார்.

Update: 2018-09-15 21:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள விரையாதகண்டன் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40). இவர் சாலைகிராமம் வாரச்சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தனது தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்தார்.

 இதனால் விரக்தி அடைந்த சந்திரசேகரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து சாலைகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்