மன்னார்குடியில் சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

மன்னார்குடியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2018-09-15 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, மன்னார்குடி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், கடலை மிட்டாய் உள்பட 9 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் உமா, துணை இயக்குனர் டாக்டர் ஸ்டான்லிமைக்கேல், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்வாசுராமன், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (மன்னார்குடி) ஜெனிபர்கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்