உத்தமபாளையத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

உத்தமபாளையத்தில், விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-17 21:30 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் கீரைமேட்டு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் வினோதினி (வயது 19). இவர் ஒரு கல்லூரியில் ஆடை வடிவமைப்பு படித்து வருகிறார். இவர், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு, பின்னர் வீட்டுக்கு வந்தபோது சோர்வாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய பெற்றோர் கேட்டபோது, வினோதினி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வினோதினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இதிரிஸ்கான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வினோதினி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், தான் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபரின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, வாலிபரின் குடும்பத்தினர் 2 நாட்களில் முடிவு சொல்வதாக கூறியுள்ளனர். இதனிடையே வினோதினி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்