நடிகை நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : காதலனின் அண்ணன் பேட்டி

நடிகை நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்கொலை செய்து கொண்ட காதலனின் அண்ணன் கூறினார்.

Update: 2018-09-19 21:30 GMT
திருவண்ணாமலை,

டி.வி. நடிகை நிலானி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்பவர். இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த காந்திலலித்குமார் என்ற வாலிபரை அவர் காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் காதலன் திருமணம் செய்து கொள்ளும்படி தன்னை தொல்லை கொடுப்பதாக நடிகை நிலானி புகார் கூறியிருந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட காந்திலலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட காந்திலலித்குமாரின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும்.

திருவண்ணாமலையில் உள்ள காந்திலலித்குமாரின் அண்ணன் ரகுகுமரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலானி என் தம்பி மீது தவறான புகார் கூறினார். அதனால் அவன் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டான். எனவே நிலானி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தம்பியும், நிலானியும் குடும்பம் நடத்தியதற்கான வீடியோக்களை விரைவில் வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காந்திலலித்குமாரின் சகோதரி உஷா கூறுகையில், ‘நிலானியை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களிடம் போனில் பேசும்போது என் தம்பியை பற்றி குறை கூறுவார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தது தொடர்பாக ஆதாரங்கள் உள்ளது. தினமும் குடும்ப செலவிற்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என நிலானி தொந்தரவு செய்வதாக எனது தம்பி கூறி உள்ளான்’ என்றார். 

மேலும் செய்திகள்