திருநின்றவூரில் வேலை இழந்த விரக்தியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை

திருநின்றவூரில் வேலை இழந்த விரக்தியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-19 23:02 GMT

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பர்னபா (வயது 30). இவர் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவரை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், அவர் வேலையின்றி தவித்து வந்தார். வேலை இழந்த விரக்தியில் இருந்த பர்னபா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்