காஞ்சீபுரத்தில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இந்த திட்டத்தினை சிறப்பாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்திடவும் மாவட்ட கலெக்டர் பொன்னையா தூய்மை ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-20 21:45 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தினை மேம்படுத்துதல், தனிநபர் இல்ல கழிவறைகளை முறையாக பயன்படுத்துதல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு அதன் விவரத்தினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்