கோவில்பட்டியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கோவில்பட்டியில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2018-10-07 22:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ளது குருமலை கிராமம். இங்குள்ள வி.டி.ஜி. நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 31). விவசாயி. இவருடைய மனைவி ராஜேசுவரி (27). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

பன்னீர்செல்வம் நேற்று காலையில் தோட்டத்து வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தையும், ராஜேசுவரியும் இருந்தனர். மாலை 4 மணிக்கு பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் ராஜேசுவரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜேசுவரியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேசுவரி தற்கொலை செய்ததன் காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேசுவரிக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்