மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-07 22:30 GMT
திருவெண்ணெய்நல்லூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வல்லம்அரசுப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 26). சம்பவத்தன்று இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கோகுல்(24) என்பவருடன் சொந்தவேலை காரணமாக திருவெண்ணெய்நல்லூர் வந்திருந்தார். பின்னர் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டனர். பெரியசெவலை அடுத்த பாரதிநகர் அருகே சென்ற போது சாலையில் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் ராஜேசும், கோகுலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர்.

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கோகுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்