திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் 10-வது நாளாக உண்ணாவிரதம்

திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் நேற்று 10-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2018-10-10 23:00 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் ஆலை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று 10-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஜெயராமன், கிருஷ்ணசாமி, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை ஆலை நிர்வாகிகளிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பளம் வழங்க ஆலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பளம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்