ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பதவியேற்பு

ராணிப்பேட்டையின் உதவி கலெக்டராக இளம்பகவத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2018-10-16 23:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை உதவி கலெக்டராக பணியாற்றி வந்த வேணுசேகரன் மாற்றப்பட்டார். இதனையடுத்து அந்த பதவிக்கு இளம்பகவத் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை உதவி கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு நெல்லையில் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியாற்றினார்.

பின்னர் புதுடெல்லியில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தில் உதவி செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட உதவி கலெக்டர் இளம்பகவத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்