செம்பூரில் அழகு நிலையத்தில் விபசாரம்; உரிமையாளர், மேலாளர் கைது

செம்பூரில் அழகு நிலையத்தில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதன் உரிமையாளர் மற்றும் மேலாளரை கைது செய்தனர்.

Update: 2018-10-21 22:15 GMT
மும்பை,

மும்பை செம்பூர் கிழக்கு பகுதியில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை அழகு நிலையத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த பெண்கள் மற்றும் அதற்காக தங்க வைக்கப்பட்டு இருந்த பெண்களை மீட்டனர்.

அவர்கள் மான்கூர்டில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் அழகு நிலைய உரிமையாளர் பாஸ்திராம் அவாத், பெண் மேலாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்