சிதம்பரத்தில்: தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

சிதம்பரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-28 22:23 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் இந்திராநகர் ரெயிலடியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் முத்துக்கருப்பன்(வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதற்காக பணம் தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முத்துக்கருப்பன் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் சிதம்பரம் ரெயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்து சென்றார். அப்போது காலை 6.35 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் நோக்கி பயணிகள் ரெயில் வந்தது.

இதை பார்த்த முத்துக்கருப்பன் திடீரென தனது தலையை தண்டவாளத்தில் வைத்து, படுத்துக்கொண்டார். பயணிகள் ரெயில் அவர் மீது மோதியதில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் துண்டானது. இதை அந்த வழியாக நடைபயிற்சி செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் முத்துக்கருப்பனின் பெற்றோர், ஓடிவந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் விரைந்து வந்து முத்துக்கருப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்