மகன் கண்முன்பே பரிதாபம்: வாகனம் மோதி தொழிலாளி பலி

சத்திரப்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி மகன் கண்முன்பே பரிதாபம் பலியானார்.

Update: 2018-11-04 22:00 GMT
புதூர், 

அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் அழகன்(வயது 55). இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கி, அங்குள்ள இரும்புக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி அவரை அழைத்து வருவதற்காக மகன் சுப்பையா(26) சென்றுள்ளார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தந்தையை அழைத்து கொண்டு சுப்பையா வலசை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். சத்திரப்பட்டி அருகே மலைப்பட்டி பகுதியில் அவர்கள் வந்தபோது பின்னால் வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அழகனும், சுப்பையாவும் தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது அதே வாகனம் சாலையில் விழுந்து கிடந்த அழகன் மீது ஏறி இறங்கியது. இதில் சுப்பையா கண்முன்பே சம்பவ இடத்திலேயே அழகன் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்