பெண் பட்டதாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

பெண் பட்டதாரி வி‌ஷம் குடித்து தற்கொலை.

Update: 2018-11-05 22:15 GMT

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் தனலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். தனலட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த தனலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (வி‌ஷம்) குடித்து மயங்கிய கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்