கடலூர் முதுநகரில் வாலிபருக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

கடலூர் முதுநகரில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-07 21:45 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் மாலுமியார் பேட்டையை சேர்ந்தவர் மணி (வயது 30). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் குபேந்திரனுடன் அங்குள்ள நாராயண படையாட்சி தெருவில் உள்ள சலூன் கடை அருகில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சிப்பாய் தெருவை சேர்ந்த விஜி(23) என்பவருக்கும், மணிக்கும் இடையே குடிபோதையில் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விஜி, அவரது மைத்துனர் பள்ளத்தெருவை சேர்ந்த தமிழ்மணி(25) ஆகியோர் மணியை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விஜி, தமிழ்மணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்