தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-11-10 21:45 GMT

ஈரோடு,

டெல்லியில் 8 வயது சிறுவனும், பீகாரில் முதியவர் ஒருவரும் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு கிளை தலைவர் சிராஜூதீன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாதிக் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்