தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-11 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலை அருகே ஆலங்கோடு ஆலுவிளையை சேர்ந்தவர் பவித்ரன் (வயது 26), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கோபிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோபிகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து  இருவரும் தனிதனி அறைகளில் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் பவித்ரன் தூங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பவித்ரன் மின்விசிறியில் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதையடுத்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பவித்ரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்