ஆலங்குளம் அருகே பெண் கொலை: கணவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்

ஆலங்குளம் அருகே நடந்த பெண் கொலையில், கணவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

Update: 2018-11-11 21:30 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே நடந்த பெண் கொலையில், கணவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

பெண் கொலை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா ஊத்துமலை அருகே உள்ள கம்மாவூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சுந்தரி (34). இவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் வளதி செல்வம் என்ற ஆண் குழந்தை உள்ளது.

சுந்தரியின் நடத்தையில் ஆறுமுகம் சந்தேகம் கொண்டதால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுந்தரி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆறுமுகம் தலைமறைவானார்.

இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சுந்தரியை, ஆறுமுகம் அடித் துக் கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் உடலை வீசிச் சென்றது தெரியவந்தது.

போலீசார் சென்னை விரைந்தனர்

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆறுமுகம் சென்னைக்கு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து ஊத்துமலை போலீசார் தனிப்படை அமைத்து ஆறுமுகத்தை தேடி வருகின்றனர். மேலும் ஆறுமுகத்தை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். வீட்டில் குழந்தையை காணாததால், ஆறுமுகம் தனது குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்