மனைவி இறந்ததால் மனவேதனை: மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுவை தேங்காய்த்திட்டு அருகே மனைவி இறந்ததால் மனவேதனை அடைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-11-11 21:45 GMT

புதுச்சேரி,

புதுவை தேங்காய்த்திட்டு பள்ளத்தெருவினை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), மீனவர். இவருடைய மனைவி வளர்மதி உடல்நலக்குறைவினால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்தார்.

மனைவி இறந்தது முதல் செல்வம் மனவேதனையில் இருந்து வந்தார். மனைவி இல்லாத நிலையில் தனது குழந்தைகளை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று அடிக்கடி கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்