கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-19 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் அருகே உள்ள குழிநாவல் கிராமத்தைச்சேர்ந்தவர் உதயகுமார் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பொன்மலர்(30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கடந்த 10-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த உதயகுமார், திடீரென வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்