புற்றுநோயால் அவதி: தீக்குளித்து பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

வலங்கைமானில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-23 22:00 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நீத்துக்காரத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருடைய மனைவி புவனேஸ்வரி(வயது35). இவர்களுக்கு 2 மகன்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் இறந்துவிட்டார். 2 மகன்களுடன் புவனேஸ்வரி வசித்து வந்தார். புவனேஸ்வரி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்