நாகை அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி யார் அவர்கள்? போலீசார் விசாரணை

நாகை அருகே சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-26 23:00 GMT
நாகூர்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகையை நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகையில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் வந்து கொண்டிருந்தனர். நாகை அருகே பாப்பாக்கோவில் சென்ற போது சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான 2 பேர் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்