காதலி தற்கொலையால் விரக்தி: வாலிபரும் தூக்கில் தொங்கி சாவு

காதலி தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு இறந்து போனார்.

Update: 2018-12-05 00:06 GMT

மூலக்குளம்,

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகரை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் ஹேமந்த் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் அந்த பெண்ணை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்துச்சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து இருந்தனர். தனது காதலனை பார்க்க முடியாத ஏக்கத்தில் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தற்கொலை செய்து கொண்டார்.

தனது காதலி இறந்ததை அறிந்த ஹேமந்த் அவரது நினைவாகவே இருந்து வந்தார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்தரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்