உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-06 22:15 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (வயது22). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் அம்பிகா செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை கணவர் மூர்த்தி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்பிகா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் அம்பிகாவை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜியும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்