திருப்பூரில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் விஷம் குடித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-12-12 21:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாஸ்கோநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா(வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் சந்தியா இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சந்தியாவை மீட்ட உறவினர்கள், அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்