பேராசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

விருதுநகர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-12-12 22:21 GMT

விருதுநகர்,

விருதுநகர் ஐ.சி.ஏ. காலனியில் வசிப்பவர் ஜெயவேல் (வயது 46). இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வீடு திரும்பிய இவர் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டை திறந்து பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம், திருட்டு போனது தெரியவந்தது. இது பற்றி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்