குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-13 22:15 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியை சேர்ந்தவர் சேசைய்யா (வயது 57), மீனவர். இவர் கடந்த சில மாதங்களாக குளச்சலில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர், குறும்பனையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு கதவை திறந்து வீட்டின் உள்ளே உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் அக்கம் பக்கத்தில் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் பார்த்த போது, சேசைய்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து குளச்சல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சேசைய்யா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேசைய்யாவுக்கு 6 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு மட்டுமே திருமணமாகியுள்ளது.

மேலும் செய்திகள்