நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-17 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் 16-வது வார்டு அண்ணாநகர் பகுதி கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் நாகை தாசில்தார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்