கோபி அருகே தூக்குப்போட்டு வங்கி ஊழியர் தற்கொலை

கோபி அருகே தூக்குப்போட்டு தனியார் வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-18 22:00 GMT

கடத்தூர்,

கோபி அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் மோகன்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார்.

இதனால் அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதன்காரணமாக அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, மோகன்ராஜ் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்